Monday, August 16, 2010

அரவாணி கதையே "அவன் இவன்"

இயக்குனர் பாலாவினைப்பொறுத்தவரையில் மற்றய இயக்குனர்கள் தங்கள் கனவிலும் கற்பனைசெய்யாத கதாபாத்திரங்களையே தனது கதையின் நாயகனாக உருவகிப்பது வழமை.

இதனடிப்படையில் சேதுவில் விக்ரமின் மனநிலைபாதித்த கதாபாத்திரமாகட்டும், நந்தா சூரியாவாகட்டும், பிதாமகன் விக்ரமின் சுடலைக்காப்பாளனாகட்டும், இறுதியாக வந்த நான் கடவுளில் ஆர்யாவின் அகோரி வேடமாகட்டும் தமிழ்சினிமாவில் அக்கதாபாத்திரங்கள் முதன்மையானவையே.

இப்போது வேகமாக பாலா இயக்கிவரும் "அவன் இவன்" திரைப்படமும் வேறுபட்ட புதுமைக் கதைக்களமே, அண்ணன் தம்பிகளிற்கிடையான கதைக்களமாக இருந்தாலும் இதில் தம்பியாக நடிக்கும் விஷால் ஆணாக இருந்தபோதும் அதிக பெண்மைத்தன்மை கொண்டவராக அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு அண்ணன் தனது தம்பி ஆரவாணி என தெரியும் பட்சத்தில் எப்படி தன்தம்பியுடன் சகோதரத்தன்மையை பேணுவான்...

No comments:

Post a Comment